செய்திகள்

அரசு கல்லூரியில் படிக்க எதிர்ப்பு - பிளஸ் 2 மாணவி தற்கொலை

Published On 2019-05-11 07:58 GMT   |   Update On 2019-05-11 07:58 GMT
அரசு கல்லூரியில் படிக்க பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து பாலக்கோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தர்மபுரி:

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்துள்ள வேலாவள்ளி பகுதியை சேர்ந்தவர் சின்னமாதன். இவரது மனைவி பழனியம்மாள். இவர்களுக்கு மங்கம்மாள் (வயது 17) என்ற மகள் உள்ளார்.

இவர் இந்த ஆண்டு பிளஸ்-2 தேர்ச்சி பெற்றதை தொடர்ந்து அவரது தந்தை சின்னமாதன் தருமபுரி தனியார் கல்லூரியில் படிப்பதற்காக விண்ணப்பம் பெற்று வந்தார்.

ஆனால் மங்கம்மாள் அரசு கல்லூரியில் தான் படிப்பேன், அங்குதான் எனது நண்பர்கள் படிக்கப் போகிறார்கள் என்று சின்னமாதனிடம் கூறினார். எனவே இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனால் மன உளைச்சலுக்கு ஆளான மங்கம்மாள் நேற்று மதியம் அவரது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதனை பார்த்த அவரது குடும்பத்தினர் அவரை மீட்டு பாலக்கோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி மங்கம்மாள் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து பாலக்கோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News