செய்திகள்

பாபநாசம் அருகே விவசாயி மீது தாக்குதல்

Published On 2019-05-09 16:35 GMT   |   Update On 2019-05-09 16:35 GMT
பாபநாசம் அருகே கடன் தகராறில் விவசாயியை தாக்கிய ஒருவரை போலீசார் கைது செய்தனர். மேலும் 3 பேரை தேடி வருகிறார்கள்.

பாபநாசம்:

பாபநாசம் அருகே மணப்படுகை கிராமம் காலனி தெருவில் வசித்து வருபவர் சாமிநாதன் (வயது 33). விவசாயி. இவர் அதே கிராமத்தை சேர்ந்த மாதவன் என்பவரிடம் ரூ.11 ஆயிரத்து 500 கடன் பெற்றிருந்தார். இந்த கடனில் ரூ.10 ஆயிரம் வரை செலுத்திவிட்டார். மீதி ரூ.1500 தராததால் மாதவன் குடும்பத்தை சேர்ந்தவர்களான கல்யாண ராமன், ஜானகிராமன், ரகுராமன், ரகுநாதன் ஆகிய 4 பேரும் சேர்ந்து சாமிநாதன் மற்றும் அவரது குடும்பத்தினரை அடித்து உதைத்து தாக்கியுள்ளனர்.

இதில் சாமிநாதன் கொடுத்த புகாரின்பேரில் பாபநாசம் போலீஸ் இன்ஸ் பெக்டர் நாகரத்தினம், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் செந்தில் ஆகியோர் வழக்குபதிவு செய்து கல்யாணராமன் வயது 25 என்பவரை கைது செய்து பாபநாசம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். மாஜிஸ்திரேட் சிவக்குமார் கல்யாணராமனை 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார். மேலும் இந்த வழக்கில் சம்மந்தப்பட்ட மூவரையும் தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News