செய்திகள்

வேலூர் தொரப்பாடியில் இளம்பெண்ணிடம் செயின் பறிப்பு

Published On 2019-04-30 17:26 IST   |   Update On 2019-04-30 17:26:00 IST
வேலூர் தொரப்பாடியில் இளம்பெண்ணிடம் 2 வாலிபர்கள் செயின் பறித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
வேலூர்:

வேலூர் தொரப்பாடி ஆசாத் ரோட்டை சேர்ந்தவர் சேட்டு இவரது மனைவி சாயினா (வது 25). இவர் நேற்று இரவு அதே பகுதியில் உள்ள காந்திஜி 3-வது தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த 2 வாலிபர்கள் சாயினாவிடம் முகவரி விசாரிப்பது போல் அவர் அணிந்திருந்த நகையை கழட்டி கொடுக்கும் படி மிரட்டினர். அதிர்ச்சியடைந்த சாயினா உயிருக்கு பயந்து தான் அணிந்திருந்த 3 பவுன் செயினை கழட்டி கொடுத்தார்.

செயினை வாங்கி கொண்ட அந்த 2 வாலிபர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர். அப்போது சாயினா கத்தி கூச்சலிட்டார் அதற்குள் அந்த 2 பேரும் தலைமறைவாகி விட்டனர்.

இது குறித்து சாயினா பாகாயம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அங்குள்ள கண்காணிப்பு பதிவுகளை வைத்து விசாரணை நடத்தி செயின் பறித்த வாலிபர்களை தேடி வருகின்றனர்.

வேலூரில் இது போன்று தொடர் செயின் பறிப்பு சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. இதனை தடுக்க போலீசார் இரவு நேரங்களில் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags:    

Similar News