செய்திகள்

பெருங்குடியில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் 10 பவுன் நகை பறிப்பு

Published On 2019-04-27 09:21 GMT   |   Update On 2019-04-27 09:21 GMT
பெருங்குடியில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் 10 பவுன் நகையை பறித்து தப்பிய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
மதுரை:

மதுரை மாவட்டம், பெருங்குடி இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் சந்திரபோஸ். இவரது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர்.

அப்போது மர்ம நபர் ஒருவன், நள்ளிரவு நேரத்தில் வீட்டுக்குள் புகுந்து சந்திர போசின் மனைவி அணிந்திருந்த 10 பவுன் நகையை பறித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தான்.

விழித்து பார்த்த சந்திரபோஸ் மற்றும் குடும்பத்தினர் விரட்டிச் சென்றபோது மர்ம நபர் தப்பிச் சென்று விட்டான். திருடப்பட்ட நகைகளின் மதிப்பு ரூ.2 லட்சம் ஆகும்.

இது குறித்து பெருங்குடி போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை தேடிவருகிறார்.
Tags:    

Similar News