திருமங்கலம் அருகே மாணவர்களுக்கு கஞ்சா விற்ற வாலிபர் கைது
பேரையூர்:
மதுரை மாவட்டத்தில் சர்வ சாதாரணமாக கஞ்சா விற்பனை நடந்து வருகிறது. இளைஞர்கள், மாணவர்களை குறிவைத்து சமூக விரோதிகள் கஞ்சா வியாபாரம் செய்து வருகிறார்கள். இதனால் இளைய சமுதாயத்தினர் போதைக்கு அடிமையாகி வாழ்வை தொலைத்து வருகின்றனர்.
கஞ்சா விற்பனையை தடுக்க மாநகர, மாவட்ட போலீசார் தீவிரம் காட்டியதாக தெரியவில்லை. திருமங்கலம் மற்றும் அதனை சுற்றி உள்ள கிராமப்புற பள்ளிகளில் படிக்கும் மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து திருமங்கலம் நகர் போலீசார் தீவிர ரோந்து சுற்றி வந்தனர். அப்போது மேலஉரப்பனூர் பகுதியில் உள்ள பள்ளியின் முன்பு கஞ்சா விற்று கொண்டிருந்த அதே பகுதியைச் சேர்ந்த மலைச் சாமி (வயது45) என்பவரை கைது செய்து அவரிடம் இருந்த 150 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
விசாரணையில் கல்லூரி, பள்ளி மாணவர்களிடம் அவர் கஞ்சா விற்றது தெரியவந்தது.