செய்திகள்

பீளமேடு அருகே ரெயில் மோதி கல்லூரி மாணவி உடல் சிதறி பலி

Published On 2019-04-25 11:46 GMT   |   Update On 2019-04-25 11:46 GMT
பீளமேடு அருகே செல்போனில் பேசியபடி தண்டவாளத்தை கடக்க முயன்ற கல்லூரி மாணவி ரெயில் மோதி பலியானார்.
கோவை:

கோவை பீளமேடு கருப்பண்ணா கவுண்டர் லே-அவுட்டை சேர்ந்தவர் முருகன். இவரது மகள் பிரியா (வயது 18). இவர் சிங்காநல்லூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.காம். முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

இன்று காலை வழக்கம்போல் கல்லூரிக்கு புறப்பட்டார். பீளமேடு- இருகூர் இடையே உள்ள ரெயில் தண்டவாளத்தில் செல்போன் பேசியபடியே நடந்து சென்றார். அப்போது அந்த வழியே வந்த ரெயிலை அவர் கவனிக்கவில்லை.

கண் இமைக்கும் நேரத்தில் வேகமாக வந்த ரெயில் பிரியா மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட மாணவி உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பலியானார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அந்த வழியாக சென்றவர்கள் இது குறித்து ரெயில்வே போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

சப்-இன்ஸ்பெக்டர் ஏசு தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடல் துண்டாகி கிடந்த மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பிரியா பலியான சம்பவம் அவரது குடும்பம் மற்றும் கல்லூரி மாணவிகளிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை அருகே உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வரும் மாணவி ஒருவர் இன்று காலை வழக்கம்போல் கல்லூரிக்கு சென்றார். திடீரென அவர் கல்லூரி முதல் மாடியில் இருந்து குதித்தார்.

அதிர்ச்சியடைந்த சகமாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் அவரை மீட்டு கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிசிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து செட்டிபாளையம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். படிக்க விருப்பம் இல்லாததால் மாணவி மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றது விசாரணையில் தெரிய வந்தது.
Tags:    

Similar News