செய்திகள்

சித்தோடு அருகே மனைவியுடன் தகராறு- கணவர் தற்கொலை

Published On 2019-04-25 11:42 GMT   |   Update On 2019-04-25 11:42 GMT
சித்தோடு அருகே மனைவியுடன் ஏற்பட்ட குடும்ப தகராறில் கணவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஈரோடு:

சித்தோடு அடுத்த பெருமாள் மலை, பெரிய மாரியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் பிரபு (வயது 37). இவரது மனைவி சுதா. கணவன் மனைவிக்கு இடையே குடும்ப தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் பிரபு கடந்த 23-ந் தேதி மனைவியுடன் கோபித்துக் கொண்டு தந்தை வீட்டுக்கு வந்தார். பின்னர் அவர் சாப்பிட்டு விட்டு தூங்க சென்று விட்டார். மறுநாள் காலை பிரபுவின் தந்தை அம்மாசை பிரபுவை எழுப்புவதற்காக அவரது அறைக்கு வந்தார்.

அப்போது பிரபு அவரது அறையில் தூக்குபோட்டு தொங்கிக் கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் பிரபுவை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர்.

அங்கு பரிசோதனை செய்த டாக்டர் பிரபு வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தார். பிரபு எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்று தெரியவில்லை.

இதுகுறித்து சித்தோடு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News