செய்திகள்

அவினாசி அருகே போலீஸ் வாகனம் கவிழ்ந்து ஒருவர் பலி - 4 போலீசார் படுகாயம்

Published On 2019-04-25 11:37 GMT   |   Update On 2019-04-25 11:37 GMT
அவினாசி அருகே போலீஸ் வாகனம் கவிந்து விபத்துகுள்ளானதில் ஒருவர் பலியானார். 4 போலீசார் உள்பட 5 பேர் படுகாயம் அடைந்தனர்.
திருப்பூர்:

கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியில் 20 வயது பெண் காணாமல் போன வழக்கின் விசாரணைக்காக கேரள சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் 4 பேர் பெண்ணின் உறவினர்கள் இருவரை அழைத்துக் கொண்டு நேற்றிரவு போலீஸ் வாகனத்தில் ஐதராபாத் புறப்பட்டனர்.

இந்த வாகனம் திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே வந்து கொண்டிருந்த போது ஆலம்பாளையம் பகுதியில் மேம்பால தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் பெண்ணின் உறவினர் ஹரி நாராயணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொரு உறவினர் வினு கோபால் மற்றும் போலீஸ்காரர்கள் ராஜேஷ், விநாயகம், அருண், அனில்குமார் ஆகிய 5 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் கோவை தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

போலீஸ் வாகனத்தை ஓட்டி வந்த டிரைவர் தூக்க கலக்கத்தில் இருந்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அவினாசி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags:    

Similar News