ஈரோடு மாவட்டத்தில் கொட்டி தீர்த்த மழை
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கோடைமழை பெய்து வருகிறது. நேற்று இரவு மற்றும் இன்று அதிகாலை வரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை கொட்டியது.
ஈரோடு, மொடக்குறிச்சி, அரச்சலூர், பவானி, கவுந்தப்பாடி, சென்னிமலை ஆகிய பகுதிகளில் இடி- மின்னலுடன் கோடை மழை கொட்டி தீர்த்தது.
மாவட்டத்தில் மொடக்குறிச்சி, முள்ளாம்பரப்பு, அரச்சலூர், ஆனைக்கால் பாளையம், லக்காபுரம், பூந்துறை, பூந்துறை வாய்க் கால்மேடு, 46 புதூர், சோலார் ஆகிய பகுதிகயில் அதிக பட்சமாக 51 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதேபோல் சத்தியமங்கலம், பவானிசாகர், வனப்பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. இந்த மழையால் காய்ந்து கிடந்த வனப்பகுதி புத்துணர்ச்சி பெற்று வருகிறது. இன்று அதிகாலை வரை பெய்த மழையால் மொடக்குறிச்சி ஈரோடு பகுதிகளில் உள்ள ரோடுகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி நின்றது.
கோடைமழையால் ஈரோடு மாவட்ட மக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். #Rain