செய்திகள்

பவானியில் விவசாயி வீட்டில் 32 பவுன் நகை கொள்ளை

Published On 2019-04-21 18:23 IST   |   Update On 2019-04-21 18:23:00 IST
பவானியில் காற்றுக்காக கதவை திறந்து வைத்து தூங்கிய விவசாயி வீட்டில் 32 பவுன் நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

ஈரோடு:

பவானி அடுத்த சீதபாளையம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் தேவராஜ் (வயது 45). விவசாயி. தேவராஜ் நேற்று இரவு காற்றுக்காக வீட்டின் கதவு திறந்து வைத்து குடும்பத்துடன் தூங்கினார்.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய மர்ம நபர் தேவராஜின் வீட்டுக்குள் புகுந்தார். பின்னர் வீட்டில் உள்ள பீரோவில் இருந்த 32 பவுன் நகையை கொள்ளையடித்துச் சென்றார்.

இன்று காலை கண் விழித்து பார்த்த தேவராஜ் பீரோ திறந்து இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் பீரோவை பார்த்தபோது பீரோவில் இருந்த 32 பவுன் நகை மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இது குறித்து தேவராஜ் பவானி போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து வீட்டை பார்வையிட்டனர்.

மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த துணிகர கொள்ளை சம்பவம் பவானியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News