திண்டுக்கல் அருகே மில் தொழிலாளி உள்பட 2 பேர் பலி
திண்டுக்கல்:
திண்டுக்கல் அருகே உள்ள கொசவபட்டியை சேர்ந்தவர் தனராஜ் (வயது55). வேடசந்தூரில் உள்ள ஒரு தனியார் மில்லில் வேலை பார்த்து வந்தார். நேற்று வேலைக்கு சென்ற தனராஜ் திடீரென மயங்கி விழுந்தார். அருகில் இருந்த ஊழியர்கள் அவரை திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். ஆனால் வரும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து வேடசந்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர் எவ்வாறு இறந்தார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல் அருகில் உள்ள கோடாங்கிபட்டியை சேர்ந்தவர் காமாட்சி(85). திருப்பூரில் வேலை பார்த்து வந்தார்.
ஓட்டு போடுவதற்காக சொந்த ஊருக்கு வந்த அவர் இன்று காலை மீண்டும் ஊருக்கு செல்வதற்காக பழனிரோட்டில் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியே வந்த மோட்டார் சைக்கிள் காமாட்சி மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து ரெட்டியார் சத்திரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.