செய்திகள்

அரக்கோணம் அருகே வாலிபர் அடித்து கொலை- போலீசார் விசாரணை

Published On 2019-04-19 16:24 IST   |   Update On 2019-04-19 16:24:00 IST
அரக்கோணம் அருகே பெண் கேட்ட தகராறில் வாலிபர் அடித்து கொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரக்கோணம்:

அரக்கோணம் அருகே உள்ள முருங்கையை சேர்ந்தவர் சந்தானம் (வயது 30). கூலி தொழிலாளி. இவருக்கு திருமணமாகி சில ஆண்டுகளிலேயே கருத்து வேறுபாடு காரணமாக மனைவி இவரை பிரிந்து சென்று விட்டார். இதனால் சந்தானம் தனிமையில் வசித்து வருகிறார்.

இந்நிலையில் சந்தானம் நேற்று நடந்த ஊர் திருவிழாவில் மது அருந்திவிட்டு அதே பகுதியை சேர்ந்த சரவணன். என்பவரிடம் குடிபேதையில் உனது பெண்ணை எனக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்றுகூறி தகராறு செய்துள்ளார். அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனால் ஆத்திரத்தில் இருந்த சரவணன் தனது நண்பர் ரமேஷ் என்பவருடன் நேற்றிரவு சந்தானம் வீட்டிற்கு சென்று சந்தானத்திடம் தட்டிகேட்டார். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர் கைகலப்பாக மாறியது.

இதில் ஆத்திரமடைந்த ரமேஷ் அங்கிருந்த கல்லை எடுத்து சந்தானம் தலையில் போட்டார். இதில் படுகாயமடைந்த சந்தானம் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே இறந்தார்.

இதையடுத்து ரமேஷ் தக்கோலம் போலீஸ் நிலையத்தில் சரணடைந்தார். போலீசார் ரமேஷை கைது செய்தனர். கொலைக்கான காரணம் குறித்து சரவணன், ரமேஷிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News