திருப்பத்துர் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் மறியல்
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் தாலுகா பொம்மிகுப்பம் பனந்தோட்டம் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கடந்த பல மாதங்களாக குடிநீர் சரிவர வழங்கபடவில்லை.
இது குறித்து சம்பந்தபட்ட அதிகாரிகளிடம் பொதுமக்கள் பல முறை முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கபடவில்லை என்று கூறபடுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் இன்று காலை திருப்பத்தூர் பொம்மிக்குப்பம் செல்லும் சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவலறிந்த திருப்பத்தூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது எங்கள் பகுதியில் பல மாதங்களாக குடிநீர் பிரச்சனை உள்ளது உடனடியாக அதற்கு தீர்வு காண வேண்டும் என்று பொதுமக்கள் கூறினர்.
சம்பந்தபட்ட அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் 1 மணி நேரம் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.