செய்திகள்

கீழ்வேளூர் அருகே அனுமதியின்றி மணல் அள்ளிய 2 வாலிபர்கள் கைது

Published On 2019-04-13 11:50 GMT   |   Update On 2019-04-13 11:50 GMT
கீழ்வேளூர் அருகே அனுமதியின்றி மணல் அள்ளிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து லாரியை பறிமுதல் செய்தனர்.

நாகப்பட்டினம்:

நாகை மாவட்டத்தில் மணல் கடத்தலை தடுக்கும் வகையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் உத்தரவின்பேரில் துணை கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் அறிவுறுத்தலின் படி போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் போலீசார் பல்வேறு இடங்களில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் கீழ்வேளூர் போலீஸ் சரகம் இலுப்பூர் சத்திரம் அருகே கீழ்வேளூர் போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த லாரியை மறித்து சோதனை செய்தனர். அதனைத் தொடர்ந்து லாரியில் வந்த 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்

விசாரணையில் அவர்கள் திருக்குவளை மேலத்தெருவை சேர்ந்த சரவணன் (வயது 38) கச்சனம் சிவன் கோவில் தெருவை சேர்ந்த கருணாகரன் மகன் அய்யப்பன் ( வயது 19)ஆகியோர் என்பதும் அவர்கள் உரிய அனுமதியின்றி கீழ்வேளூர் பகுதியில் உள்ள ஆற்றில் இருந்து மணல் அள்ளிச் சென்றதும் தெரியவந்தது.

இதுகுறித்து கீழ்வேளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சரவணன் ஐயப்பன் ஆகிய 2 பேரை கைது செய்தனர் மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய லாரியை பறிமுதல் செய்தனர். இதில் லாரி உரிமையாளர் பாங்கலை சேர்ந்த முருகையன் மகன் கோவிந்தராஜ் என்பவரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Tags:    

Similar News