செய்திகள்

ரெயில் மோதி முதியவர் பலி - போலீசார் விசாரணை

Published On 2019-04-12 10:13 GMT   |   Update On 2019-04-12 10:13 GMT
ரெயில் மோதி முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈரோடு:

சங்ககிரியை அடுத்த வீரபாண்டிய ரெயில் நிலையத்திற்கும் மகுடஞ்சாவடி ரெயல் நிலையத்துக்கும் இடையே உள்ள தண்டவாளத்தில் சம்பவத்தன்று சுமார் 60 வயது மதிக்கத்தக்க ஆண் உடல் கிடப்பதாக ஈரோடு ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அந்த நபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இறந்தவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் ரெயில் மோதி இறந்து விட்டதாக தெரிய வந்துள்ளது.

அவர் தண்டவாளத்தை கடக்கும் போது ரெயில் மோதி இறந்தாரா? அல்லது ஓடும் ரெயிலிருந்து தவறி விழுந்து இறந்தாரா? என்றும் தெரியவில்லை.

Tags:    

Similar News