செய்திகள்

மதுரை எல்லீஸ் நகரில் நடந்து சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு

Published On 2019-04-12 14:54 IST   |   Update On 2019-04-12 14:54:00 IST
மதுரை எல்லீஸ் நகரில் நடந்து சென்ற பெண்ணிடம் நகையை பறித்துச் சென்ற 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

மதுரை:

மதுரை எல்லீஸ் நகரைச் சேர்ந்தவர் சலீம். இவரது மனைவி மும்தாஜ்பேகம் (வயது 46). இவர் சம்பவத்தன்று 2-வது பால்பூத் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் மும்தாஜ்பேகத்தை பின் தொடர்ந்து வந்தனர். ஆள் நடமாட்டம் இல்லாத பகுதி வந்தபோது மர்ம நபர்கள் மும்தாஜ்பேகத்தை வழிமறித்து அவரிடம் இருந்த 5 பவுன் நகையை பறித்துக் கொண்டு தப்பினர்.

இது குறித்து மும்தாஜ்பேகம் எஸ்.எஸ்.காலனி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News