செய்திகள்

சிவகங்கை அரசு ஆஸ்பத்திரியில் ஊழியர் கத்தியால் குத்திக்கொலை-வாலிபர் கைது

Published On 2019-04-10 09:53 GMT   |   Update On 2019-04-10 09:53 GMT
அரசு ஆஸ்பத்திரியில் ஊழியரை கத்தியால் குத்திக்கொலை செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

காரைக்குடி:

சிவகங்கை நேரு பஜார் வீதியைச் சேர்ந்தவர் தமிழ்செல்வன் (வயது 40). இவர் சிவகங்கை அரசு மருத்துவ மனையில் மருந்தக பிரிவில் தற்காலிக ஊழியராக பணி புரிந்து வந்தார்.

இன்று காலை தமிழ் செல்வன் வழக்கம் போல் வேலைக்கு வந்தார். மதியம் பணியில் இருந்தபோது ஒக்கூரைச் சேர்ந்த அருண்குமார் என்ற வாலிபர் அங்கு வந்துள்ளார். அவர் தமிழ்செல்வனிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார்.

அப்போது ஆத்திரமடைந்த அருண்குமார் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து தமிழ் செல்வனை சரமாரியாக குத்தினார்.

இதை பார்த்த சக ஊழியர்கள் அதிர்ச்சிய டைந்தனர். ரத்த வெள்ளத்தில் மயங்கிய தமிழ் செல்வனுக்கு உடனே அங்கேயே சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சம்பவம் நடந்த சிறிது நேரத்திலேயே தமிழ்செல்வன் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் மற்றும் போலீசார் அரசு மருத்துவ மனைக்கு வந்து விசாரணை நடத்தினர். தமிழ்செல்வனை கொலை செய்த அருண்குமாரை போலீசார் கைது செய்தனர். எதற்காக கொலை நடந்தது? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News