செய்திகள்

வால்பாறையில் 500 அடி பள்ளத்தில் தவறி விழுந்து முதியவர் பலி

Published On 2019-04-09 12:01 GMT   |   Update On 2019-04-09 12:01 GMT
வால்பாறையில் 500 அடி பள்ளத்தில் தவறி விழுந்த முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வால்பாறை:

வால்பாறை அருகே உள்ள அய்யர்பாடி எஸ்டேட் இரண்டாவது பிரிவைச் சேர்ந்தவர் பெரியசாமி(65). இவர் ரொட்டிக்கடை பகுதியில் அமைந்துள்ள சிலுவைமேடு பகுதியில் கிடைக்கக்கூடிய ஒரு வகையான புற்களை கொண்டு சீமார் செய்து விற்பனை செய்து வாழ்ந்து வருகின்றார்.

இவர் கடந்த 3 நாட்களுக்கு முன்னால் புற்களை எடுப்பதற்கு சென்றவர் வீட்டுக்கு வரவில்லை. இந்த நிலையில் அவரது உறவினர்கள் பெரியசாமியை ரொட்டிக்கடை, அய்யர்பாடி எஸ்டேட் பகுதியில் தேடிப் பார்த்த போது ரொட்டிக்கடை சிலுவை மலையில் உள்ள 500 அடி பள்ளத்தில் பாறையின் மீது உருண்டு விழுந்து இறந்துகிடந்தது தெரிந்துள்ளது.

இது குறித்து உறவினர்கள் வால்பாறை போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். போலீசார் பெரியசாமியின் உடலைக் கைப்பற்றி வால்பாறை அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். #tamilnews
Tags:    

Similar News