செய்திகள்

மார்த்தாண்டம் அருகே ஆட்டோ டிரைவர் தற்கொலை

Published On 2019-04-09 11:39 GMT   |   Update On 2019-04-09 11:39 GMT
மார்த்தாணடம் அருகே ஆட்டோ டிரைவர் மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகர்கோவில்:

மார்த்தாண்டம் சென்னித்தோட்டம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 35). ஆட்டோ டிரைவர்.

இவர் தனது வீட்டின் அருகே உள்ள ஒரு மரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார். இதனைப்பார்த்த உறவினர்கள் கதறி அழுதனர்.

மேலும் சம்பவம் குறித்து மார்த்தாண்டம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மணிகண்டன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்பது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
Tags:    

Similar News