செய்திகள்

காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த உறவினர் மீது தாக்குதல்- 2 வாலிபர்கள் கைது

Published On 2019-03-29 13:59 GMT   |   Update On 2019-03-29 13:59 GMT
வடக்கு கோணம் அருகே காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த உறவினர் மீது தாக்குதல் நடத்திய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
ராஜாக்கமங்கலம்:

நாகர்கோவில் வடக்கு கோணம் பகுதியை சேர்ந்தவர் ஜெயசூர்யா (வயது 23). ஜெயசூர்யாவின் உறவு பெண் ஒருவரை அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் காதலித்தார். இதற்கு ஜெயசூர்யா எதிர்ப்பு தெரிவித்தார்.

இந்த தகவல் அந்த வாலிபருக்கு தெரியவந்தது. இதையடுத்து அந்த வாலிபரும் அவரது நண்பர்கள் ரபீஸ், ரகு, சஞ்சு  உள்பட 6 பேர் சேர்ந்து வடக்கு கோணம் சென்று ஜெயசூர்யாவை தாக்கினர். இது பற்றி ஜெயசூர்யா, ராஜாக்கமங்கலம் போலீசில் புகார் செய்தார். அதில் ரபீஸ், ரகு, சஞ்சு உள்பட 6 பேர் சேர்ந்து தன்னை தாக்கி கொலை  மிரட்டல் விடுத்ததாக கூறியிருந்தார்.

அதன் பேரில் ராஜாக்கமங்கலம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ராஜகோபால் விசாரணை நடத்தி 6 பேர் மீதும் வழக்குபதிவு செய்தார். இதில் ரகு, சஞ்சு இருவரும் கைது செய்யப்பட்டனர். மற்றவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
Tags:    

Similar News