செய்திகள்
புதுவையில் இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் கைது
புதுவையில் இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி:
சென்னை ஆவடியை சேர்ந்த 22 வயது இளம்பெண் ஒருவர் புதுவையில் உள்ள தனது உறவினர் வீட்டில் தங்கி இருந்தார். அப்போது புதுவை வ.உ.சி. தெருவை சேர்ந்த ரமேஷ் என்ற வாலிபர் அந்த இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அந்த இளம்பெண் தனது உறவினரிடம் கூறி கதறி அழுதுள்ளார். இதுதொடர்பாக அவர்கள் ஒதியஞ்சாலை போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குபதிவு செய்து இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் ரமேசை கைது செய்தனர். #tamilnews
சென்னை ஆவடியை சேர்ந்த 22 வயது இளம்பெண் ஒருவர் புதுவையில் உள்ள தனது உறவினர் வீட்டில் தங்கி இருந்தார். அப்போது புதுவை வ.உ.சி. தெருவை சேர்ந்த ரமேஷ் என்ற வாலிபர் அந்த இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அந்த இளம்பெண் தனது உறவினரிடம் கூறி கதறி அழுதுள்ளார். இதுதொடர்பாக அவர்கள் ஒதியஞ்சாலை போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குபதிவு செய்து இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் ரமேசை கைது செய்தனர். #tamilnews