செய்திகள்

ஏற்காட்டில் அரசு பஸ் மோதி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பலி

Published On 2019-03-27 10:03 GMT   |   Update On 2019-03-27 10:03 GMT
ஏற்காட்டில் அரசு பஸ் மோதி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஏற்காடு:

சேலம் மாவட்டம் ஏற்காடு போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர் மாணிக்கம் (வயது 55). இவர் சேலம் சின்னத்திருப்பதியில் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். இவர் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு ஏற்காடு காவல் நிலையத்திற்கு சிறப்பு காவல் உதவி ஆய்வாளராக பணியில் சேர்ந்தார்.

இந்நிலையில் இவர் நேற்று இரவு பணி முடிந்து வீட்டிற்கு சென்றார். பின்னர் போலீஸ் நிலையத்தில் ஆட்கள் இல்லாததால் இன்று காலை மீண்டும் அவர் பணிக்காக ஏற்காடு நோக்கி அவசரமாக வந்து கொண்டிருந்தார்.

அவர் ஏற்காடு மலை பாதை 20-வது கொண்டை ஊசி வளைவில் வந்துகொண்டிருந்த போது எதிரே வந்த அரசு பேருந்தில் நேருக்கு நேர் மோதியதில் சம்பவ இடத்திலேயே பலியானார்.

இந்த விபத்து குறித்து ஏற்காடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News