செய்திகள்

வாலாஜாபாத் அருகே வேன் மீது லாரி மோதல் - 2 பேர் பலி

Published On 2019-03-26 09:17 GMT   |   Update On 2019-03-26 09:17 GMT
வாலாஜாபாத் அருகே வேன் மீது லாரி மோதலில் 2 பேர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

காஞ்சிபுரம்:

வாலாஜாபாத்தை அடுத்த ஒரகடத்திதல் தனியார் தொழிற்சாலை உள்ளது.

இங்கு இரவு பணி முடித்த தொழிலாளர்கள் 15 பேர் ஒரு வேனில் காஞ்சிபுரம் புறப்பட்டனர். நள்ளிரவு 2 மணியளவில் இந்த வேன் காஞ்சிபுரம் சாலையில் சென்று கொண்டிருந்தது.

அப்போது காஞ்சிபுரத்தில் இருந்து செங்கல்பட்டு நோக்கி வேகமாக சென்ற  லாரி ஒன்று வேன் மீது பயங்கரமாக மோதியது. இதில் சேதம் அடைந்த வேன் நிலை தடுமாறி பள்ளத்தில் கவிழ்ந்தது. அப்போது வந்து கொண்டிருந்த மற்றொரு கார் மீதும் லாரி மோதியது.

இந்த விபத்தில், கார் டிரைவர் ரிஷாந்த், வேனில் பயணம் செய்த லோகேஷ் ஆகியோர் அதே இடத்தில் உடல் நசுங்கி பரிதாபமாக பலியானார்கள். வேனில் இருந்த 14 பேரும், காரில் பயணம் செய்த 2 பேரும் படுகாயம் அடைந்தனர்.

16 பேரும் காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். வாலாஜாபாத் போலீசார் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News