செய்திகள்
வாகன சோதனையில் ரூ.85ஆயிரம் பறிமுதல்
வாகன சோதனையில் ரூ.85ஆயிரம் பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து கருவூலத்தில் ஒப்படைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்புவனம்:
பாராளுமன்ற தேர்தலையொட்டி மாவட்டம் முழுவதும் வாகன சோதனை நடந்து வருகிறது. இந்நிலையில் திருப்புவனத்தை அடுத்த திருபாச்சேத்தி நான்கு வழிச்சாலை சுங்கச்சாவடி அருகே பறக்கும் படை தாசில்தார் செந்தில்வேல், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சோமசுந்தரபாரதி ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ராமேசுவரத்தில் இருந்து மதுரை நோக்கி சென்ற ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது உரிய ஆவணம் இல்லாமல் அந்த காரில் ரூ.85ஆயிரம் கொண்டு சென்றது தெரிய வந்தது. இதையடுத்து அந்த பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து கருவூலத்தில் ஒப்படைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அந்த காரில் சென்றவர், ராமேசுவரத்தைச் சேர்ந்த மீனவருக்கு படகு உபகரண பொருட்கள் வாங்க சென்றதாக தெரிவித்தார்.
பாராளுமன்ற தேர்தலையொட்டி மாவட்டம் முழுவதும் வாகன சோதனை நடந்து வருகிறது. இந்நிலையில் திருப்புவனத்தை அடுத்த திருபாச்சேத்தி நான்கு வழிச்சாலை சுங்கச்சாவடி அருகே பறக்கும் படை தாசில்தார் செந்தில்வேல், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சோமசுந்தரபாரதி ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ராமேசுவரத்தில் இருந்து மதுரை நோக்கி சென்ற ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது உரிய ஆவணம் இல்லாமல் அந்த காரில் ரூ.85ஆயிரம் கொண்டு சென்றது தெரிய வந்தது. இதையடுத்து அந்த பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து கருவூலத்தில் ஒப்படைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அந்த காரில் சென்றவர், ராமேசுவரத்தைச் சேர்ந்த மீனவருக்கு படகு உபகரண பொருட்கள் வாங்க சென்றதாக தெரிவித்தார்.