செய்திகள்

காரிமங்கலம் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி பிளஸ் 1 மாணவன் பலி

Published On 2019-03-21 13:18 GMT   |   Update On 2019-03-21 13:18 GMT
காரிமங்கலம் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் பிளஸ் 1 மாணவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
காரிமங்கலம்:

தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்துள்ள புதுப்பட்டி பகுதியை சேர்ந்தவர் ராஜா. இவரது மகன் பிரதீப்குமார் (வயது17). இவர் ஒத்தஅள்ளி அரசு பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். நேற்று மாலை தனது மோட்டார் சைக்கிளில் பிரதீப்குமார் காரிமங்கலம் டவுன் இருந்து சர்வீஸ்ரோடு வழியாக தேசிய நெடுஞ்சாலைக்கு செல்ல முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த லாரி எதிர்பாராத விதமாக பிரதீப்குமார் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே பிரதீப்குமார் தலை நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த காரிமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த விபத்தில் பலியான பிரதீப்குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக காரிமங்கலம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News