செய்திகள்
பலியான முத்துலட்சுமி

வெள்ளகோவிலில் விபத்து - இளம்பெண் தலைநசுங்கி பலி

Published On 2019-03-19 13:48 GMT   |   Update On 2019-03-19 13:48 GMT
வெள்ளகோவிலில் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் இளம்பெண் தலைநசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
வெள்ளகோவில்:

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் மூலனூர் ரோட்டை சேர்ந்தவர் திருமூர்த்தி கட்டிடத்தொழிலாளி. இவர் குடும்பத்துடன் அங்குள்ள செங்கல்சூளை குடியிருப்பில் தங்கி வேலை பார்த்து வந்தார்.

இவரது மகள் முத்துலட்சுமி (வயது 20). இவர் அங்குள்ள ஜவுளிக்கடையில் வேலை பார்த்து வந்தார். முத்துலட்சுமிக்கு திருமண ஏற்பாடுகள் நடந்து வந்தன.

இந்தநிலையில் இன்று காலை முத்துலட்சுமி மூலனூர் சாலையில் சைக்கிளில் சென்றார். அப்போது பரமகுடியில் இருந்து ஈரோடு சர்க்கரை ஆலைக்கு மரத்தூள் ஏற்றிய லாரி வந்தது.

எதிர்பாராதவிதமாக லாரி முத்துலட்சுமி ஓட்டி வந்த சைக்கிள் மீது மோதியது. இதில் நிலைதடுமாறி கீழே விழுந்தார். அப்போது அதே லாரி முத்துலட்சுமி தலையில் ஏறி இறங்கியது. இதில் மூளை சிதறி சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

விபத்தை ஏற்படுத்திய டிரைவர் லாரியை நிறுத்தி விட்டு தப்பி ஓட முயன்றார். அந்த பகுதிமக்கள் அவரை மடக்கிப்பிடித்தனர். இது குறித்து வெள்ளகோவில் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து முத்துலட்சுமியின் உடலை மீட்டு காங்கயம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
Tags:    

Similar News