செய்திகள்

வத்தலக்குண்டுவில் போதையில் தீக்குளித்து வாலிபர் தற்கொலை

Published On 2019-03-19 12:11 GMT   |   Update On 2019-03-19 12:11 GMT
வத்தலக்குண்டுவில் குடிபோதையில் தீக்குளித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

வத்தலக்குண்டு:

வத்தலக்குண்டு ராஜன் நகரை சேர்ந்த சுப்பையா-ராஜாத்தி மகன் கதிரேசன் (வயது34). இவர் டாஸ்மாக் பார்களில் வேலை பார்த்து வந்தார். இன்னும் திருமணமாகவில்லை. குடி பழக்கத்திற்கு அடிமையானவர். இவர் அடிக்கடி தனது தாயிடம் தற்கொலை செய்து கொள்ளபோவதாக மிரட்டி வந்தார்.

நேற்று இரவு போதையில் வீட்டிற்கு வந்த கதிரேசன் வழக்கம்போல தற்கொலை செய்ய போவதாக கூறி உள்ளார். ஆனால் வீட்டில் இருந்தவர்கள் அதனை கண்டுகொள்ளவில்லை. பின்னர் தன் உடலில் மண்எண்ணை ஊற்றி கதிரேசன் தீ வைத்துக் கொண்டார்.

பலத்த காயங்களுடன் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து வத்தலக்குண்டு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கண்ணாகாந்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News