செய்திகள்
நல்லம்பள்ளி அருகே கல்லூரி மாணவி மாயம்
நல்லம்பள்ளி அருகே கல்லூரி மாணவி மாயமானது குறித்து அவரது தந்தை போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தர்மபுரி:
தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அடுத்துள்ள பண்ட அள்ளியை சேர்ந்தவர் முனிராஜ். இவர் கர்நாடகாவில் உள்ள ஒரு கல் குவாரியில் வேலை செய்து வருகிறார். இவரது மகள் சிந்து (வயது19). இவர் தனியார் கல்லூரியில் பி.காம். இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த 7-ந் தேதி அன்று சிந்து கல்லூரிக்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்தார். பின்னர் இரவு வீட்டை விட்டு வெளியே சென்ற சிந்து வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் முனிராஜ் உறவினர் வீடு உள்பட பல்வேறு இடங்களில் தேடி பார்த்தார். ஆனால் எங்கும் தேடியும் சிந்து கிடைக்கவில்லை.
இதுகுறித்து முனிராஜ் இண்டூர் போலீசில் எனது மகள் சிந்துவை எர்பைனஅள்ளியை சேர்ந்த அண்ணாதுரை மகன் கலையரசன் என்பவர் கடத்தி சென்றிருக்கலாம் என்று புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.