செய்திகள்

குன்னம் அருகே சரியாக தேர்வு எழுதாததால் பிளஸ்-2 மாணவி தற்கொலை

Published On 2019-03-16 11:52 GMT   |   Update On 2019-03-16 11:52 GMT
குன்னம் அருகே சரியாக தேர்வு எழுதாததால் மனமுடைந்த பிளஸ்-2 மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

குன்னம்:

பெரம்பலூர் மாவட்டம் மருவத்தூர் அருகே கொட்டரை கிராமத்தை சேர்ந்தவர் நல்லத்தம்பி, விவசாயி. இவரது மகள் சினேகா (வயது 17). இவர் குன்னத்தில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.

இவர் பிளஸ்-2 தேர்வினை சரியாக எழுத வில்லை என கூறப்படுகிறது. இது குறித்து தோழிகள், வீட்டில் உள்ளவர்களிடம் கூறி கவலையில் இருந்துள்ளார். இந்த நிலையில் நேற்று மதியம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வயலுக்கு தெளிக்கும் பூச்சி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

இதனை பார்த்த உறவினர்கள் மீட்டு பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலே சினேகா பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து மருவத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராம்குமார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்.

Tags:    

Similar News