செய்திகள்

ராயக்கோட்டை அருகே இளம்பெண்ணை மிரட்டி நகை பறித்தவர் கைது

Published On 2019-03-14 14:32 GMT   |   Update On 2019-03-14 14:32 GMT
ராயக்கோட்டை அருகே இளம்பெண்ணை மிரட்டி கல்லால் தாக்கி நகை பறித்தவர் கைது செய்யப்பட்டார்.
ராயக்கோட்டை:

தருமபுரி மாவட்டம் தளவாய்அள்ளி பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ். இவரது மனைவி தேவி (வயது 20). இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் உத்தனப்பள்ளியில் உள்ள ஒரு கோவில் திருவிழாவிற்காக அதே பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தார்.

நேற்று காலை தேவி காலை கடன் கழிப்பதற்காக வெளியே சென்றார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த அம்பிகா என்பவர் அங்கு வந்து தேவியிடம் காதில், கழுத்தில் இருக்கும் நகைகளை கழட்டி கொடுக்குமாறு கேட்டார். அதற்கு தேவி கொடுக்க மறுத்தார். உடனே அம்பிகா அருகில் இருந்த கல்லை எடுத்து அவரை தாக்கினார். பின்னர் அவர் தேவியின் கழுத்தில், காதில் இருந்த ஒரு பவுன் நகைகளை பறித்துவிட்டு அவரை அருகில் உள்ள பள்ளத்தில் தள்ளிவிட்டு அம்பிகா அங்கிருந்து தப்பி சென்று விட்டார். 

கல்லால் தாக்கியதில் பலத்த காயம் அடைந்த தேவி வலியால் அலறினார். அவரது அலறல் சத்தம்கேட்டு உடனே அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து அவரை மீட்டு கெலமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவிக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.  

இந்த சம்பவம் குறித்து தேவி உத்தனபள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் ராயக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவலிங்கம் இளம்பெண்ணை மிரட்டி நகை பறித்துசென்ற அம்பிகா மீது வழக்குபதிவு செய்து கைது செய்தனர்.
Tags:    

Similar News