செய்திகள்

தனுஷ்கோடி கடற்கரையில் இலங்கையைச் சேர்ந்தவர் கைது

Published On 2019-03-13 11:16 GMT   |   Update On 2019-03-13 11:16 GMT
தனுஷ்கோடி கடற்கரையில் இலங்கையைச் சேர்ந்தவரை போலீசார் கைது செய்தனர்.

ராமேசுவரம்:

தனுஷ்கோடி கடற்கரை பகுதியில் ராமேசுவரம் கியூ பிரிவு போலீசார் ரோந்து வந்தனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக ஒருவர் நிற்பதை பார்த்தனர். அவரை பிடித்து விசாரித்ததில் அந்த முதியவர் இலங்கை தலை மன்னார் பகுதியைச் சேர்ந்த ஜெயசீலன் (வயது 52) என்று தெரியவந்தது. தொடர்ந்து அவரிடம் விசாரித்தபோது அவர் கூறியதாவது:-

கடந்த 2 நாட்களுக்கு முன்பு நாட்டுப்படகில் ராமேசுவரம் வந்தேன். இங்கு கஞ்சா வாங்கிக் கொண்டு மீண்டும் இலங்கைக்கு புறப்பட்டேன். அப்போது கடற்படையினர் ரோந்து வருவதைப் பார்த்து மணல் திட்டையில் பதுங்கினேன்.

அந்த சமயத்தில் நான் வந்த படகு கரை ஒதுங்கியது. அதனை மீட்க செல்வதற்காக கடலில் நீந்தி கரைக்கு வந்தேன். அப்போது தான் ரோந்து வந்த போலீசாரிடம் சிக்கிக் கொண்டேன் என்றார்.

போலீஸ் விசாரணையில் ஜெயசீலனுக்கும், ராமேசுவரத்தில் உள்ள கடத்தல் காரர்களுக்கும் இடையே தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.

மேலும் மண்டபம், ராமேசுவரம் காவல் நிலையங்களில் ஜெயசீலன் மீது வழக்குப்பதிவாகி உள்ளதும் தெரியவந்துள்ளது. தொடர்ந்து அவரிடம் விசாரணை நடைபெறுகிறது.

Tags:    

Similar News