செய்திகள்

ஈரோட்டில் மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி வாலிபர் பலி

Published On 2019-03-11 11:07 GMT   |   Update On 2019-03-11 11:07 GMT
ஈரோட்டில் மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் தலையில் காயமடைந்த வாலிபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
ஈரோடு:

ஈரோடு மாமரத்துபாளையம் புது காலனியைச் சேர்ந்தவர் பாலு (வயது 27). தனியார் மில்லில் கேஷியராக உள்ளார். திருமணமாகவில்லை.

இந்த நிலையில் பாலு சம்பவத்தன்று இரவு காரை வாய்க்கால் சொக்கலிங்கம் வீதியை சேர்ந்த செல்வராஜ (46) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

மூலப்பாளையம் பகுதியில் வந்து கொண்டிருந்தபோது மோட்டார் சைக்கிளில் பின்னால் வந்த கார் எதிர் பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் பாலு செல்வராஜ் இருவரும் நிலை தடுமாறி பைக்கில் இருந்து கீழே தவறி விழுந்தனர். இதில் தலையில் படுகாயமடைந்த பாலு சம்பவ இடத்திலேயே பலியானார். செல்வராஜ் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஈரோடு தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து செல்வராஜை சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் பாலுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து ஈரோடு தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
Tags:    

Similar News