செய்திகள்

புதுவண்ணாரபேட்டையில் டி.ஜி.பி. அலுவலக அதிகாரி மனைவியிடம் நகை பறிப்பு

Published On 2019-03-09 09:25 GMT   |   Update On 2019-03-09 09:25 GMT
புதுவண்ணாரபேட்டையில் டி.ஜி.பி. அலுவலக அதிகாரி மனைவியிடம் நகை பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராயபுரம்:

புதுவண்ணாரப்பேட்டை திருவள்ளுவர் குடியிருப்பில் வசித்து வருபவர் நாமதுரை. இவர் டி.ஜி.பி. அலுவலகத்தில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி அன்னலட்சுமி.

நேற்று இரவு அன்னலட்சுமி தனது சகோதரியுடன் வீட்டு அருகே உள்ள கோவிலுக்கு சென்று விட்டு திரும்பி கொண்டிருந்தார். அப்போது மோட்டார்சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள், அன்னலட்சுமி கழுத்தில் இருந்த 12 பவுன் தங்க செயினை பறித்து விட்டு தப்பி சென்றனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் உள்ள சி.சி. டி.வி. கேமராவை ஆய்வு செய்து வருகிறார்கள்.

Tags:    

Similar News