செய்திகள்

புன்னம்சத்திரத்தில் அனுமதியின்றி மது விற்ற வாலிபர் கைது

Published On 2019-02-28 15:03 GMT   |   Update On 2019-02-28 15:03 GMT
புன்னம்சத்திரத்தில் அனுமதியின்றி மது விற்ற வாலிபரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்த 5 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
வேலாயுதம்பாளையம்:

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடனை அருகே ஜன வெளியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (27). இவர் கரூர் மாவட்டம், புன்னம்சத்திரம் அருகே மசக்கவுண்டன்புதூர் செல்லும் சாலையில் அனுமதியின்றி மது பாட்டில்களை விற்பனை செய்து வருவதாக வேலாயுதம்பாளையம் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. 

இதைத் தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்த போது அங்கு மணிகண்டன் மது விற்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 5 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
Tags:    

Similar News