செய்திகள்

கடலூரில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

Published On 2019-02-26 16:53 GMT   |   Update On 2019-02-26 16:53 GMT
மாற்றுத்திறனாளிகளை சித்தரித்து அரசியல் கட்சி தலைவர்கள் பேசுவதை கண்டித்து கடலூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் லட்சிய முன்னேற்ற சங்கம் சார்பில் கடலூர் பழைய கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கடலூர்:

மாற்றுத்திறனாளிகளை சித்தரித்து அரசியல் கட்சி தலைவர்கள் பேசுவதை கண்டித்து கடலூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் லட்சிய முன்னேற்ற சங்கம் சார்பில் கடலூர் பழைய கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்ட தலைவர் சந்தோஷ் தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச்செயலாளர் சண்முகம், மாவட்ட பொருளாளர் தட்சிணா மூர்த்தி, பண்ருட்டி தலைவர் தனுஷ் பத்மா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் விருத்தாச்சலம் தலைவர் அமரேசன், மாவட்ட மகளிரணி தலைவர் சித்ரா, நிர்வாகிகள் பாலமுருகன், கொளஞ்சிநாதன், மகாலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர். #tamilnews
Tags:    

Similar News