செய்திகள்

கும்மிடிப்பூண்டி அருகே கிணற்றில் மூழ்கி தலைமை ஆசிரியர் பலி

Published On 2019-02-26 06:19 GMT   |   Update On 2019-02-26 06:20 GMT
கும்மிடிப்பூண்டி அருகே கிணற்றில் மூழ்கி தலைமை ஆசிரியர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கும்மிடிப்பூண்டி:

கும்மிடிப்பூண்டியை அடுத்த கவரைப்பேட்டையைச் சேர்ந்தவர் முரளிபாபு (வயது57). இவர் பாதிரிவேட்டில் உள்ள அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக வேலை செய்து வந்தார்.

நேற்று பள்ளிக்கு செல்லாத இவர், போந்தவாக்கம் கிராமத்தில் வயல்வெளியில் உள்ள தரை கிணறு ஒன்றில் இறங்கி குளித்து கொண்டிருந்தார். அப்போது தண்ணீரில் மூழ்கிய தலைமை ஆசிரியர் முரளிபாபு பரிதாபமாக இறந்தார்.

Tags:    

Similar News