செய்திகள்

திருச்செந்தூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி செயற்குழு கூட்டம்

Published On 2019-02-23 12:29 GMT   |   Update On 2019-02-23 12:29 GMT
விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் பாராளுமன்ற தேர்தல் சிறப்பு செயற்குழு கூட்டம் திருச்செந்தூர் தோப்பூர் சமுதாய நலக்கூடத்தில் நடைபெற்றது.
திருச்செந்தூர்:

தூத்துக்குடி தெற்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் பாராளுமன்ற தேர்தல் சிறப்பு செயற்குழு கூட்டம் திருச்செந்தூர் தோப்பூர் சமுதாய நலக்கூடத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் முரசு தமிழப்பன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக கட்சியின் மாநில துணை பொதுச்செயலாளர் கலைவேந்தன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். 

கூட்டத்தில் தற்போது நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி கட்சி வேட்பாளர்களை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச்செய்வது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில் மண்டல செயலாளர் தமிழினியன், மாவட்ட பொருளாளர் பாரிவள்ளல், மாவட்ட துணைச்செயலாளர் இந்திரா, சமூக நல்லிணக்க பேரவை மாவட்ட செயலாளர் தமிழ்பரிதி, திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி செயலாளர் வெற்றிவேந்தன், நாடாளுமன்ற தொகுதி செயலாளர் அரசூர் ராஜ்குமார், திருச்செந்தூர் நகர செயலாளர் உதயா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News