செய்திகள்
பல்லடத்தில் பெயிண்டர் தூக்குப்போட்டு தற்கொலை
பல்லடத்தில் மனைவி பிரிந்து சென்றதால் பெயிண்டர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பல்லடம்:
பல்லடம் மங்கலம் ரோடு காமராஜர் நகரை சேர்ந்தவர் அப்பாஸ் (வயது 38) பெயிண்டர். இவரது மனைவி ரமீலா (30). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் அப்பாசுக்கு குடிப்பழக்கம் இருந்தது. இதனால் கணவன்- மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் மனைவி கோபித்துக்கொண்டு குழந்தைகளுடன் பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். அப்பாஸ் தனது தாய் சைனாவுடன் வசித்து வந்தார். மனைவி, குழந்தைகளை பிரிந்த அப்பாஸ் விரக்தியில் மது குடித்ததாக தெரிகிறது. சம்பவத்தன்று இரவு அப்பாஸ் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பல்லடம் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.