செய்திகள்
நெற்குன்றத்தில் கணவர் மீது வெந்நீர் ஊற்றி கொன்ற மனைவி கைது
நெற்குன்றத்தில் மது குடித்து வந்த தகராறில் கணவர் மீது வெந்நீர் ஊற்றி கொன்ற மனைவி கைது செய்யப்பட்டார்.
போரூர்:
நெற்குன்றம் மந்தை வெளி தெருவைச் சேர்ந்தவர் ரமேஷ். லாரி டிரைவர். இவரது மனைவி விமலா. ரமேஷ் தினமும் மது குடித்து விட்டு விமலாவை அடித்து உதைத்து வந்தார். கடந்த 18ந் தேதி குடிபோதையில் வந்த ரமேஷ்-விமலா இடையே தகராறு ஏற்பட்டது.
அப்போது விமலாவை கடுமையாக தாக்கினார். அப்போது விமலா அடுப்பில் கொதித்து கொண்டு இருந்த வெந்நீரை ரமேஷ் மீது ஊற்றினார்.
இதில் உடல் வெந்து அலறி துடித்த ரமேசை மீட்டு சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று ரமேஷ் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து வழக்குபதிவு செய்து கோயம்பேடு இன்ஸ்பெக்டர் மாதேஸ்வரன் மற்றும் போலீசார் இன்று விமலாவை கைது செய்தனர்.