செய்திகள்

தஞ்சையில் கார் விபத்து: ஓய்வுபெற்ற சப்-இன்ஸ்பெக்டர் பலி

Published On 2019-02-20 09:59 GMT   |   Update On 2019-02-20 09:59 GMT
தஞ்சையில் இன்று காலை கார் மோதிய விபத்தில் ஓய்வுபெற்ற சப்-இன்ஸ்பெக்டர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
தஞ்சாவூர்:

தஞ்சை - வல்லம் சாலையில் உள்ள ஜெயலட்சுமி அவென்யூ பகுதியை சேர்ந்தவர் நடராஜன்(வயது 63). ஓய்வுபெற்ற சப்- இன்ஸ்பெக்டர்.

இந்த நிலையில் இன்று காலை நடராஜன், வீட்டில் இருந்து வாக்கிங் சென்று கொண்டிருந்தார். பின்னர் புதிய பஸ் நிலைய பகுதியில் இருந்து வீட்டுக்கு அவர் திரும்பி கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக ஒரு கார், திடீரென நடராஜன் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே நடராஜன் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து பற்றி தகவல் கிடைத்ததும் தமிழ் பல்கலைக்கழக போலீசார் விரைந்து வந்து நடராஜன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தஞ்சை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் விபத்து குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.

விபத்தில் பலியான நடராஜனுக்கு மனைவி மற்றும் 3 மகன்கள் உள்ளனர்.
Tags:    

Similar News