செய்திகள்

நாட்டறம்பள்ளி அருகே விபத்தில் பால் வியாபாரி பலி

Published On 2019-02-18 11:55 GMT   |   Update On 2019-02-18 11:55 GMT
நாட்டறம்பள்ளி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் பால் வியாபாரி பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாட்டறம்பள்ளி:

நாட்டறம்பள்ளி பூபதி தெருவை சேர்ந்தவர் மணிவண்ணன் (வயது 55) பால் வியாபாரி. இவர் நேற்று மாலை பங்களாமேடு என்ற இடத்திற்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் பைக் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது.

இதில் அவர் படுகாயமடைந்தார் அவரை மீட்ட பொதுமக்கள் திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் மணிவண்ணன் செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து நாட்டறம்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News