செய்திகள்

கணவர் முதல் திருமணத்தை மறைத்து ஏமாற்றியதால் புதுப்பெண் தற்கொலை

Published On 2019-02-17 09:26 GMT   |   Update On 2019-02-17 09:26 GMT
திருவான்மியூரில் கணவர் முதல் திருமணத்தை மறைத்து ஏமாற்றியதால் புதுப்பெண் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சோழிங்கநல்லூர்:

திருவான்மியூர் காமராஜர் நகர் 3-வது தெருவில் வசித்து வருபவர் சிவசங்கர். இவரது மனைவி நித்தியா (27). இவர்களுக்கு 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

இந்த நிலையில் சிவசங்கருக்கு கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பே திருமணம் நடந்த தகவல் நித்தியாவுக்கு தெரிய வந்தது. இதனால் அவர் கடும் அதிர்ச்சி அடைந்தார்.

கணவர் அவருக்கு நடந்த முதல் திருமணத்தை மறைத்து தன்னை ஏமாற்றி திருமணம் செய்ததால் ஆத்திரம் அடைந்து அவரிடம் சண்டை போட்டார். இதனால் ஆத்திரமடைந்த சிவசங்கர் நித்தியாவிடம் தகராறு செய்து விட்டு வெளியே சென்று விட்டார்.

இதனால் மன உளைச்சல் அடைந்த நித்தியா வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தகவலறிந்த திருவான்மியூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நித்தியாவின் உடலை கைப்பற்றி ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். நித்தியா எழுதி கடிதத்தை போலீசார் கைப்பற்றினர்.

இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து சிவசங்கரை தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News