செய்திகள்
வாழப்பாடி அருகே தீயில் கருகிய லாரி டிரைவர் பலி
வாழப்பாடி அருகே தீயில் கருகிய லாரி டிரைவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்த வருகின்றனர்.
சேலம்:
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள சின்னக்கவுண்டம்பட்டி பகுதியை சேர்ந்தவர் அண்ணாதுரை (வயது 45). லாரி டிரைவர். சொந்தமாக லாரி வைத்துள்ளார்.
நேற்று முன்தினம் அந்த லாரியில் வைக்கோல் பாரம் ஏற்றிக்கொண்டு வீராணம் ஏரிக்கரைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற மின் வயர் வைக்கோலில் பட்டு தீப்பிடித்தது.
இந்த சம்பவத்தில் அண்ணாதுரைக்கு தீக்காயம் ஏற்பட்டது. அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று காலை அண்ணாதுரை பரிதாபமாக இறந்தார். இது குறித்து வீராணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.