செய்திகள்

ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் போதைப் பொருள் கடத்தல் கைதி மரணம்

Published On 2019-02-15 09:29 GMT   |   Update On 2019-02-15 09:29 GMT
சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த போதைப்பொருள் கடத்தல் கைதி இன்று காலை உயிரிழந்தார்.
ராயபுரம்:

கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் இப்ராகிம் (60). இவரை போதைப் பொருள் கடத்தல் வழக்கில் போலீசார் கைது செய்து புழல் ஜெயிலில் தண்டனை கைதியாக அடைத்தனர்.

இந்த நிலையில் இப்ராகிமுக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டது. அவருக்கு கடந்த 2 மாதமாக ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இன்று காலை சிகிச்சை பலனின்றி இப்ராகிம் பரிதாபமாக இறந்தார்.
Tags:    

Similar News