செய்திகள்

சேலம் அருகே வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த மோட்டார் சைக்கிள் தீ வைத்து எரிப்பு

Published On 2019-02-15 08:26 GMT   |   Update On 2019-02-15 08:26 GMT
சேலம் அருகே வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த மோட்டார் சைக்கிள் தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம்:

சேலம் தாதம்பட்டி பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 55). எலக்ட்ரீசியன். இவர் நேற்று இரவு வீட்டின் முன்பு தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தியிருந்தார். இன்று காலை பார்த்தபோது அந்த மோட்டார் சைக்கிள் முழுவதும் தீயில் எரிந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜேந்திரன் அம்மாப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரில் அவர் கூறியிருப்பதாவது:-

கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு கும்பல் தாதம்பட்டி குதியில் ஒரு ஆட்டோவை தீ வைத்து எரித்து விட்டார்கள். அப்போது அந்த இடத்தில் இருந்து சில அடி தூரம் தள்ளி எனது சகோதரியும், எனது மகனும் நின்று கொண்டிருந்தனர். அவர்களையும் மர்மகும்பல் தாக்கியது. இதை தட்டி கேட்டபோது எனக்கும், அந்த மர்மகும்பலுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அவர்கள் தான் எனது மோட்டார் சைக்கிளை தீ வைத்து எரித்திருந்த வேண்டும். எனவே, அந்த கும்பல் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த புகாரில் ராஜேந்திரன் கூறியிருந்தார். அதன்பேரில் போலீசார், மர்மகும்பல் குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். 
Tags:    

Similar News