செய்திகள்

புதுவை அருகே வடமாநில வாலிபர் குத்திக்கொலை

Published On 2019-02-13 11:54 GMT   |   Update On 2019-02-13 11:54 GMT
புதுவை அருகே வடமாநில வாலிபர் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேதராப்பட்டு:

புதுவையை அடுத்த தமிழக பகுதியான சின்ன கோட்டக்குப்பத்தில் தனியார் கெஸ்ட் அவுஸ் உள்ளது. பல ஏக்கர் நிலப்பரப்பளவில் அமைந்துள்ள கெஸ்ட்அவுசில் நீச்சல்குளம் கட்டும் பணி நடந்து வருகிறது.

அதற்காக வட மாநிலத்தை சேர்ந்த பலர் தொழிலாளர்களாக வேலை பார்த்து வருகின்றனர். அதில் அசாம் மாநிலத்தை சேர்ந்த விபின்சர்க்கார் (வயது 47). இவருடைய சித்தப்பா மகன் கெரன் பிஸ்வாஸ் (37) ஆகியோர் வேலை பார்த்தனர். அவர்கள் இருவரும் ஒரே அறையில் தங்கி இருந்தனர்.

இதில் கெரன் பிஸ்வாஸ்க்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்து வந்தது. இதனால் கோபம் அடைந்த விபின்சர்க்கார் நாம் வேறு மாநிலத்தில் இருந்து வந்து வேலை செய்கிறோம். தினமும் மது குடிக்காமல் பணத்தை சேர்த்து வைத்து வீட்டுக்கு அனுப்பு என்று கூறினார்.

இதனால் இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த கெரன் பிஸ்வாஸ் விபின்சர்க்காரை சரமாரியாக தாக்கினார்.

இதனால் ஆத்திரமடைந்த விபின்சர்க்கார் அறையில் இருந்த கத்தியை எடுத்து வந்து கெரன் பிஸ்வாஸ் முகம் மற்றும் பல இடங்களில் கத்தியால் குத்தினார். இதில் ரத்தவெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே கெரன் பிஸ் வாஸ் இறந்து போனார்.

சம்பவம் நடந்த பார்ம் ஹவுசை சுற்றி மதில் சுவர் உள்ளதால் வெளியே வர முடியாததால் கொலை நடந்து பல மணி நேரம் ஆகியும் இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு வடமாநில தொழிலாளர்கள் தகவல் தெரிவிக்கவில்லை.

விடியற்காலையில் சம்பவம் குறித்து உள்ளூர் பொதுமக்களுக்கு தெரிய வரவே அவர்கள் மூலமாக கோட்டக்குப்பம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் கோட்டக்குப்பம் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பிம்ஸ் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கொலையாளி விபின்சர்க்கார் தப்பி செல்லாமல் அங்கேயே அழுதபடி இருந்தார். அவரை போலீசார் கைது செய்தனர். #tamilnews
Tags:    

Similar News