செய்திகள்

வேதாரண்யம் அருகே பெற்ற மகளை கற்பழித்த காமகொடூர தந்தை- போலீசார் விசாரணை

Published On 2019-02-13 10:42 GMT   |   Update On 2019-02-13 10:42 GMT
வேதாரண்யம் அருகே பெற்ற மகளையே தந்தை கற்பழித்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வேதாரண்யம்:

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள மருதூர் கிராமத்தை சேர்ந்தவர் பாஸ்கர் (வயது 41). தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். அதில் 1 மகளுக்கு 14 வயதாகிறது. மனைவி மலேசியாவில் தங்கியிருந்து வேலை பார்க்கிறார். இதனால் பாஸ்கர் தனது 2 மகள்களுடன் மருதூர் கிராமத்தில் வசித்து வந்தார்.

இந்த நிலையில் பாஸ்கர் தனது 14 வயது மகளுக்கு அடிக்கடி பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அந்த சிறுமி தனது தந்தையை கண்டித்து வந்தாள். ஆனால் பாஸ்கர் அதை பொருட்படுத்தாமல் தொடர்ந்து மகளை தொந்தரவு செய்து வந்துள்ளார்.

தந்தை தன்னிடம் தவறாக நடந்து கொள்கிறாரே என்று எண்ணி அவர் மனவேதனையில் இருந்தார்.

இந்த நிலையில் நேற்று இரவு வீட்டில் இருந்த மகளை திடீரென பலவந்தமாக பாஸ்கர் கற்பழித்தாக தெரிகிறது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த சிறுமி இது குறித்து வேதாரண்யம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) வேம்பரசி வழக்கு பதிவு செய்து பாஸ்கரிடம் விசாரணை நடத்தி வருகிறார்.

இதையடுத்து பாதிக்கப்பட்ட சிறுமியை போலீசார் மீட்டு மருத்துவ பரிசோதனைக்காக திருவாரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
Tags:    

Similar News