செய்திகள்

நிச்சயிக்கப்பட்ட பெண்ணை திருமணம் செய்ய மறுப்பு- மணமகன் உள்பட 5 பேர் மீது வழக்கு

Published On 2019-02-13 10:04 GMT   |   Update On 2019-02-13 10:04 GMT
ராஜபாளையம் அருகே நிச்சயிக்கப்பட்ட பெண்ணை திருமணம் செய்ய மறுத்த மணமகன் உள்பட 5 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ராஜபாளையம்:

ராஜபாளையம் அருகே உள்ள சுந்தரராஜபுரத்தைச் சேர்ந்தவர் வெள்ளையப்பன். இவரது மகள் ரேவதி (வயது 25). இவருக்கும் சென்னை கொடுங்கையூர் வெங்கடேஸ்வரா நகரைச் சேர்ந்த மாடசாமியின் மகன் சண்முகராஜுக்கும் (31) கடந்த ஜனவரி 21-ந் தேதி திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

இந்த திருமணம் கடந்த 10-ந்தேதி நடைபெறுவதாக இருந்தது. இந்த நிலையில் நிச்சயிக்கப்பட்ட ரேவதியை திருமணம் செய்ய மணமகன் வீட்டார் மறுத்து விட்டனர்.

இதுகுறித்து ரேவதியின் தந்தை வெள்ளையப்பன் ராஜபாளையம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் சண்முகராஜ், அவரது தந்தை மாடசாமி, தாயார் கலாவதி, சகோதரிகள் அறிவுமதி, வளர்மதி ஆகிய 5 பேர் மீது இன்ஸ்பெக்டர் மீனா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News