செய்திகள்

கூட்டுறவு சங்கத்தேர்தல் முறைகேடு வழக்கு- தேர்தல் அதிகாரி அறிக்கை தாக்கல் செய்ய மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

Published On 2019-02-13 09:38 GMT   |   Update On 2019-02-13 09:38 GMT
கூட்டுறவு சங்கத் தேர்தல் முறைகேடு தொடர்பான வழக்கில் தேர்தல் அதிகாரி அறிக்கை தாக்கல் செய்யும்படி ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. #MadrasHCBench
மதுரை:

அண்மையில் மாநிலம் முழுவதும் கூட்டுறவு சங்கத்தேர்தல் நடத்தப்பட்டது. அப்போது பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக புகார்கள் எழுந்தன. மேலும் பல இடங்களில் கூட்டுறவு சங்கத்தேர்தல்கள் ரத்து செய்யப்பட்டன.

தமிழகத்தில் நடந்த கூட்டுறவு சங்க தேர்தல் முறைகேடு தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு மதுரை ஐகோர்ட்டில் பலர் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்கு இன்று (13-ந்தேதி) நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.



அப்போது தமிழகத்தில் எத்தனை கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல் நடத்தப்பட்டுள்ளது? என்பது குறித்தும், வெளிப்படையாக தேர்தல் நடத்த என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? எத்தனை பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்? என்பது குறித்தும் வருகிற 19-ந்தேதி கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் ஆணையர் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும் கூட்டுறவு சங்கத்தேர்தல் வேட்பு மனுத்தாக்கல் செய்வதை டிஜிட்டல் முறையாக்கவும், அதனை வீடியோ பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் ஆணையருக்கு, நீதிபதிகள் உத்தரவிட்டனர். #MadrasHCBench
Tags:    

Similar News