செய்திகள்

ஆந்திராவில் இருந்து சென்னைக்கு லாரியில் மணல் கடத்தல் - 2 பேர் கைது

Published On 2019-02-11 06:45 GMT   |   Update On 2019-02-11 06:45 GMT
ஆந்திராவில் இருந்து சென்னைக்கு லாரியில் மணல் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கும்மிடிப்பூண்டி:

கும்மிடிப்பூண்டியை அடுத்த பாதிரிவேடு அருகே உள்ள சாணாப்புத்தூர் கூட்டுச் சாலையில் சப்- இன்ஸ்பெக்டர் மாரிமுத்து தலைமையில் பாதிரிவேடு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியே வந்த 2 லாரிகளை மடக்கி சோதனை செய்தனர். இந்த லாரிகளில் ஆந்திராவில் இருந்து அனுமதியின்றி சென்னைக்கு மணல் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது.

விசாரணையில் ஆந்திராவில் இருந்து பல்வேறு தமிழக கிராமங்கள் வழியாக ரகசியமாக மணல் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.இதையடுத்து லாரி டிரைவர் மதுரை வாளையார்குளம் கிராமத்தைச் சேர்ந்த டேவிட் (38), எளாவூர் அடுத்த துராபள்ளம் கிராமத்தைச்சேர்ந்த ரகுபதி(35) ஆகியோரை கைது செய்தனர்.

மணல் கடத்தி வந்த 2 லாரிகளும் பறிமுதல் செய்யப்பட்டன. இதன் பின்னணியில் இருப்பது யார் என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

Tags:    

Similar News